IMF பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்!

<!–

IMF பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்! – Athavan News

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)  பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் இணையவழியூடாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கான முன்னோட்டமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளை இடம்பெறும் பேச்சுவார்த்தையின்போது சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் நிதி உறுதிப்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *