பசுவைக் கொன்று வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியை வீசிய விசமிகள்

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் ,மேய்ச்சலுக்காக கட்டி விடப்பட்ட பசுவை , இறைச்சிக்காக கொன்று அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியினை எடுத்து வீசி விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கன்று ஈனும் நிலையில் இருந்த பசுமாடு ஒன்றை களவாடி ,அதன் வயிற்றை கிழித்து,கன்றுக்குட்டியை வீசி விட்டு,மிகுதியை இறைச்சியாக்கிய சந்தேகத்தில் 4 பேர் சிக்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நான்கு பேரையும் கால் நடையின் எச்சங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர் களை நீதிமன்றத்தில் முற் படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *