கிளிநொச்சியில் முதியவரொருவர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி, ஏ-09 வீதியின் பரந்தன் பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தனிமையில் தங்குயிருந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் அந்த விடுதியில் தங்கி இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வரை, தமது குடும்பத்துடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் தொடர்பு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

71 வயதான குறித்த முதியவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டு, நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *