திலினி பிரியமாலியை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிணைமுறி சட்டத்தின் 14(1)(பி) பிரிவின் கீழ் திலினி பிரியமாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்தார்.
இதேவேளை, திலினி பிரியமாலி செய்த நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட பொரளை சிறிசுமண தேரரை நவம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.