கணினிமயமாக்கப்படும் யாழ். சமுர்த்தி வங்கிகள்

யாழ்.மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளை கணினிமயப்படுத்தும் நடவடிக்கைகள் சமுர்த்தி திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம், கோண்டாவில், ஆவரங்கால், உடுப்பிட்டி ஆகிய சமுர்த்தி வங்கிகளை கணினிமயப்படுத்த ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தென்மராட்சி  பிரதேசத்தின் சாவகச்சேரி, கொடிகாமம், வரணி ஆகிய சமுர்த்தி வங்கிகளை கணிணிமயப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

இதுவரை காலமும் பதிவு முறை அடிப்படையில் சமுர்த்தி வங்கிகள் சேவைகளை வழங்கி வந்தன.

தற்போது வங்கி நடவடிக்கைகள் கணினிமயப்படுத்துவதனால் மக்கள் சிரமமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *