உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

போராட்டத்தை கட்டுப்படுத்த முற்பட்ட போது தாக்கப்பட்டு, உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் அகம்பொடிகே சுனிலுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அகம்பொடிகே சுனிலுக்கு பொலிஸ் சார்ஜன்ட் பதவியில் இருந்து உப பொலிஸ் பரிசோதகராக குறித்த பதவி உயர்வு 31.10.2022 முதல் வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கபிதிகொல்லேவ, ரம்பகெப்பு குளம் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி மதியம் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பிரதேசவாசிகள் சிலர் வீதியை மறித்து டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தச் சென்ற கபிதிகொல்லேவ பொலிஸ் சார்ஜன்ட் பிரதேசவாசிகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த அதிகாரியின் இறுதிக் கிரியைகள் நாளை (03) வாரியபொல சுமங்கல பொது மயானத்தில் பூரண பொலிஸ் மரியாதையுடன் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *