மேற்கு பிரான்ஸில் உள்ள Carantec (Finistère) இல் உள்ள Rue François le Duc இல் உள்ள சிறிய கடலோர நகரமான Morlaix இல் ஞாயிற்றுக்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 41 வயதான கணவர், 38 வயதான மனைவி மற்றும் 11 மற்றும் 8 வயதுடைய இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் நாய் ஒன்று கொல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டது.
குடும்பப் பிளவு காரணமாக இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், கணவரே மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொன்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் தாய் தனது மகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் அங்கு சென்று நான்கு சடலங்களையும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்தில் நோயியல் நிபுணர்கள் மற்றும் புலனாய்வாளர்களால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் வெளிப்புற காயங்கள் அல்லது உடல்கள் எதிலும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.