
கூமாங்குளம் , நெளுக்குளம் பிரதான வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட பற்றைக் காடுகள் அகில இலங்கை இளைஞர் முன்னணியின் தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய இராசையா விக்டர்ராஜ் மூலம் நேற்றையதினம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையிலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே பயணித்து வந்த நிலையில் இவ்வீதி துப்பரவு செய்யப்பட்டுள்ளது தொடர்பில் பொதுமக்கள் தமது நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
மேலும் குறித்த பகுதியில் குப்பைகளையும், மாமிச கழிவுகளையும் கொட்டுபவர்களை வீடியோ ஆதாரத்துடன் தருபவர்களுக்கு 5000 சன்மானம் வழங்கப்படும் என்றும் கழிவுகளை குறித்த பகுதியில் கொட்டும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கும் அவர்களின் வியாபார அனுமதி பத்திரம் தடை செய்வதற்குமான நடவடிக்கையும் எடுப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் இதன்போது விக்ரர்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதிகளில் மின்விளக்குகளும் இளைஞர் முன்னணியினரால் பொருத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்