பெருந்தோட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்டத்தில் இன்று மக்கள் பாவனைக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எட்றா நிறுவனத்தால் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் பெருந்தோட்ட மக்கள் நலன் கருதி மலையகப் பகுதியில் உருவாக்க பட்டு வருகிறது.

அதன் படி இன்று மஸ்கெலியா பகுதியில் உள்ள ஸ்ரஸ்பி தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் இலங்கையில் உள்ள ஜப்பானிய உயர் ஸ்தானிகர் தலைமையில் இன்று காலை மக்கள் பாவனைக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் எட்றா நிறுவன அதிகாரி, தோட்ட முகாமைத்துவம், நலன் புரி உத்தியோகத்தர்கள், சுகாதார அதிகாரிகள், இவ் வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த சுத்தமான குடிநீர் திட்டம் மூலம் ஸ்ரஸ்பி தோட்ட மக்கள் பயனடைய உள்ளனர்.
கடந்த 200 ஆண்டு காலமாக இந்த மக்கள் முறையான குடிநீர் இன்றி பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *