பேருந்தின் மீது லொறி மோதி விபத்து – 16 பேர் காயம்!

வாதுவ – சுதுவெளிமங்கட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பேருந்தின் மீது, பின்னால் வந்த லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 16 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *