கண்ணீர் புகைக்கு வேலை வைக்காத போராட்டக்காரர்கள் – கொழும்பில் போராட்டம் பிசுபிசுப்பு

அரசுக்கு எதிராக இன்று கொழும்பில் மதியம் முதல் போராட்டம் இடம்பெற்றது.

கொழும்பு – மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது.அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆர்ப்பாட்ட பேரணியாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார், படையினர் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் போராட்டப் பேரணி கோட்டை புகையிரத நிலையம் வரை செல்வதர்க்கு தீர்மானிக்கப்பட்டது.எனினும் கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட படையினர் வீதி முழுவதும் குவிக்கப்பட்டனர்.பல மணி நேரமாக பொலிஸாரின் தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் செல்வதற்கு முயற்சித்தும் அது பயன் பற்று போனது.பொலிஸார் பொறுமையையும் கடைபிடித்து ,வன்முறைகளையும் பிரயோகிக்காமையால் தற்போது குறித்த இடத்தை விட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

மேலும் போராட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருக்கு ,போராட்டக்காரர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *