திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலுள்ள வயல் வெளியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று புதன்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹெட்டி ஆராச்சிகே நெல்சன் வயது (59) எனவும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவ. W.M.பியஸிஸ்ஸ வயது (60) எனவும் தெரியவருகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர் நபர் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிற செய்திகள்