ஆரம்பிக்கட்பட்ட நிலையில் அதன் மூலம் ஏற்படுகின்ற அனர்த்தங்களை எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்
வடகீழ் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பிக்கட்பட்ட நிலையில் அதன் மூலம் ஏற்படுகின்ற அனர்த்தங்களை எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று (2022.11.02) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
எதிர் வரும் காலங்களில் ஏற்படும் அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாக்க முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது
இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,வெளிக்கள உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர்கள்,இரானுவம்,பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்