ஓ.என்.பி மூலமாக அரசாங்கம் எமது போராட்டத்தினை முடக்குவதற்கு நடவடிக்கை- லீலாவதி கருத்து!

வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறவுகளாகிய நாங்கள் சுவிஸ் தூதரகத்தின் பிரதிநிதிகள் இருவரை சந்திக்கும் முகமாக வருகை தந்திருக்கின்றோம் எமது சந்திப்பு காலை 10 மணிக்கு இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்பில் நாம் இங்கு எதிர்நோக்குகின்ற பாதுகாப்பு பிரச்சனைகள் உட்பட்ட பல்வேறு பிரச்சனைகளை நாங்கள் அவர்களுக்கு விளக்கமாக கூறினோம்

இது தவிர ஓ.என்.பி மூலமாக இந்த அரசாங்கம் எமது போராட்டத்தினை முடக்குவதற்கான நடவடிக்கைளை தந்திரமாக மேற்கொள்ளும் முறைகள் பற்றியும் மிகவும் விளக்கமாக அவர்களுக்கு கூறியிருக்கிறோம். இதனை அவர்கள் கேட்டு குறிப்பெடுத்துக்கொன்டு சென்றிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இந்த விடயங்களை ஏனைய நாடுகளுக்கும் எடுத்துச் சொல்வதற்கு இருக்கின்றோம். இந்த ஓ.என்.பி இனை முடக்குவதற்க்காக வந்த ஆணையாளர் பல்வேறு உத்திகளை கையாளுகிறார்.

அதன் ஒரு யுத்தியாக நடமாடும் சேவையினையும்,எமது ஓ.என்.பி அலுவலகத்தையும் முன்னிறுத்தி செய்வதனால் பொது மக்களிடமிருந்து எமக்கு எதிர்ப்பு வர வேண்டும் என்பதற்காகத் தான் இரண்டையும் ஒன்றாக செய்து வருகிறார்கள்.

குறிப்பாக ஓ.என்.பி அலுவலகத்தில் உள்ளூர் அலுவலகர்களைப் பாவித்து அவர்களை எங்கள் மக்களுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இத்தனையும் சுவிஸ் தூதரக பிரதிநிகளிடம் கூறியிருக்கிறோம்.தொடர்ந்து இடம்பெறும் சந்திப்புக்களில் ஏனைய நாட்டு தூதரகத்தினருக்கும் தெரியப்படுத்த இருக்கின்றோம் என தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *