
பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் பேரில், ஊழல் எதிர்ப்பு முன்னணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாமல்குமார தனது வீட்டிற்குள் வைத்து தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பின்னர், அவரை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாகவும் குறித்த பெண் கூறுகிறார். மேலும் நான்கு பேரும் நாமலை தாக்கியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாமல் குமாரவினால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்படும் குறித்த பெண் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, வாரியகொட பகுதிக்கு சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யும் வீடொன்று தொடர்பில் தகவல் சேகரிப்பதற்காக தனது மனைவியுடன் சென்றபோது குறித்த பெண் உள்ளிட்ட குழுவினரால் தான் தாக்கப்பட்டதாக நாமல் குமார வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, நாமல் குமார தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (02) வரக்காபொல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பிற செய்திகள்