வவுனியாவில் கால்நடைகளினால் போக்குவரத்திற்கு இடையூறு!

வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மழை ஆரம்பித்துள்ள நிலையில் நெளுக்குளம், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், குளுமாட்டுச்சந்தி, பூந்தோட்டம் மற்றும் வவுனியா நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் இரவு மற்றும் காலை வேளைகளில் கட்டாக்காலி மாடுகள் நடு வீதிகளில் படுத்துறங்குவதனால் போக்குவரத்து செய்வோர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு கடந்த காலங்களில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

எனவே கட்டாக்காலி மாடுகளை பிடித்து போக்குவரத்துக்களை இடையூறுகள் இன்றி மேற்கொள்வதற்கு உதவி செய்யுமாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *