அமெரிக்காவால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட பி627 ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் நேற்று (02) புதன்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது.
அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தால் 2021ஆம் ஆண்டு இலங்கைக் கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சுமார் 14 ஆயிரம் எம்.என். தாங்குதிறன் கொண்ட குறித்த கப்பல், அதிகபட்சமாக 29 விநாடிகள் வேகத்தில் ஊடுருவும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 187 பேர் உள்ளடங்கக்கூடிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, அதிநவீன ஆயுதங்கள் இயந்திரங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது