சீன போர்க்கப்பல்களுக்கு நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்தவும் – இலங்கையிடம் இந்தியா வலியுறுத்து

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனாவின் போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்ப இலங்கை அனுமதித்தமைக்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக பல ஆதாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகமானது சீன போர்க்கப்பல்களுக்கு இந்தியா அல்லது அமெரிக்க தலையீடு இல்லாமல் எரிபொருள் நிரப்புவதற்கு சரியான தீர்வை வழங்குகிறது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை கவனத்தில்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகள் இலங்கையிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக சீனப் போர்க்கப்பல்கள் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று இந்தியாவுடன் அமெரிக்காவும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி தேவைப்படுவதால், இலங்கை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளமையும் இதற்கு காரணமாக அமைந்ததாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *