சிகரெட்டின் விலையை அதிகரிக்கத் திட்டம்

நாட்டில் புகைபிடிப்பர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தால் குறைந்துள்ளது என புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ச தெரிவிக்கையில்,

எதிர்வரும் காலங்களில் புகைப்பிடிப்பவர்களில் 51 சதவீதமானவர்களில் அதிலிருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக நிலையங்களில் சில்லறை விலைக்கு சிகரெட் விற்பனை செய்யப்படுவதாலேயே அதிலிருந்து அவர்கள் விடுபட தடையாக உள்ளது.

சிகரெட்டின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டு, அதற்காக விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்– என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *