பெரசிட்டமோல் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு

நாட்டில் உள்ள சில வைத்தியசாலைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுவாக இந்நாட்டில் நோயாளிகளின் சிகிச்சைக்காக 1300க்கும் மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. 383 வகையான மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் சுமார் 160 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *