அமெ. தூதரகப் பெண்ணின் கைப்பை நடுவீதியில் கொள்ளை

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் சேவையாற்றும் அமெரிக்கப் பிரஜையான பெண் ஒருவரின் கைப்பையை நடுவீதியில் வைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்கவுக்கு கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸார் அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த அமெரிக்க தூதரகப் பெண் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த வேளை அவரின் கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளனர் என பொலிஸ்மா அதிபருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் நீதிமன்றுக்கு தகவலறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதில் கொள்ளையிடப்பட்ட கைப்பையில் குறித்த தூதரக பெண்ணின் ஆயிரத்து 250 டொலர் பெறுமதியான அப்பிள் ரக கையடகத்தொலைபேசி, 20 ஆயிரம் ரூபா பணம், அடையாள அட்டை, ஆவணங்கள் அடங்கலாக அவற்றின் பெறுமதி 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாவுக்கு அதிகம் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களைக் கைது செய்ய பிரதேசத்தின் சி.சி.ரி.வி. காணொளி பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *