ஜப்பானின் முன்னணி நிறுவனமான ஷிமோவின் பிரதிப் பணிப்பாளர் ஷிமோடோரி ஹிரோயுகி, பிரதமர் தினேஷ் குணவர்தனவை பிரதமர் காரியாலயத்தில் சந்தித்தார்.
இச் சந்திப்பில் “சிதாவக்க பிரதேசத்தில்” ஜப்பானிய மொழி பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பிரதமருக்கும் ஷிமோ நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதோடு, இலங்கை மக்கள் ஜப்பானுக்கு வரும் வகையில் இரு நாடுகளும் இணைந்து ஜப்பானிய மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்தவுள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும் இக்கலந்துரையாடலில், ஜப்பானின் ஷிமோ நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன் ஜப்பானுக்குச் செல்ல விரும்பும் எந்தவொரு நபரும் ஜப்பானிய மொழிக் கல்வியை இலவசமாகப் பெற்றுக் கொள்வதோடு சிறந்த ஜப்பானிய மொழிக் கல்வியைப் பெறக்கூடிய சூழலை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாடத்திட்டத்தில், ஜப்பானில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தகவல் தொடர்பு பிரச்சனைகளை குறைக்கும் வகையில் இரு நாடுகளின் கலாச்சாரங்கள் தொடர்பான சிறப்பு கல்வியை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இலங்கையில் உட்கொள்ளாத மீன் பாகங்களை மறுசுழற்சி செய்து ஜப்பானுக்கு கால்நடைத் தீவனமாக இறக்குமதி செய்யும் புதிய திட்டத்தை மிரிஸ்ஸ பிரதேசத்தில் ஆரம்பிக்க ஷிமோ அமைப்பு எதிர்பார்த்துள்ளதாகவும் ஷிமோவின் பிரதிப் பணிப்பாளர் திரு. ஷிமோடோரி ஹிரோயுகி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, SHIMO அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி இனோஹரா சமிலா ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்