முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் அனைக்கட்டு வெட்டுவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அன்மித்த கிராமத்தில் உள்ள நெல் காணிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுவதனால் வட்டுவாகல் கடலை இனைக்கும் முனையை வெட்டுவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர் , திணைக்களம் சார்ந்த அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பிற செய்திகள்