
நான்கு நாட்களின் பின்னர் இன்று (03) ஹட்டன் நகரில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் எரிபொருள் இறக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விடுவிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டிகள் உட்பட பெருமளவான வாகனங்கள் எரிபொருளைப் பெறுவதற்காக மீண்டும் வரிசையில் காத்திருந்தனர்.
பெற்றோல் எரிபொருளின் விலை குறைவதாக வெளியான செய்தியில், கடந்த சில நாட்களாக பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் பெற்றோல் எரிபொருளுக்கான முன்பதிவுகளை வழங்காததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அசோகரியத்தை சந்தித்தது இதை தொடர்ந்து இன்று பெட்ரோல் வழங்கப்படுவதை அறிந்த பொதுமக்கள் பெட்ரோல் நிலையத்திற்கு முன் குவிந்தனர்.
பிற செய்திகள்