
வடமாகாணத்தில் போதைப்பொருள் பாரிய பிரச்சனையாக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
இலங்கை தீவாக காணப்படுவதால் போதைப்பொருளின் வருகை அதிகமாக காணப்படுகின்றது எனவும், அந்த வகையில் மீனவர்கள், மீன சங்கங்கள் மற்றும் குறித்த பகுதிகளிலுள்ள மக்களின் ஒத்துழைப்புடனேயே போதைப்பொருளை தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிடுவதற்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சரிடம் ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாப்பு தரப்பினர், மக்கள்பிரதிநிதிகள் மற்றும் குடிசார் அமைப்புக்களும் போதைப்பொருளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மஸ்தான் கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில் அனைவரையும் இணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாகவும், எனினும் அதனை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதனால எமது இளைஞர் சமூகம் பாரிய அவலத்திற்குள் உள்வாங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த விஜயத்தில் கலந்துக்கொண்டிருந்த கடதொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்