இன்னுமொரு தோட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி!

டயகம் கிழக்கு பகுதியில், மின்சாரம் தாக்கி தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று 3ம் திகதி மாலை 3 மணியளவிலேயே இச் சம்பவம் நடைபெற்றதுள்ளது.

டயகம கிழக்கு மூன்றாம் பிரிவை சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த தொழிலாளி, தொழிற்சாலை உத்தியோகத்தரின் பணிப்பின் பேரில் அவரின் வசிப்பிட தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற போது தோட்டத்தில் விலங்குகளின் – பாதுகாப்புக்கு பொறுத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தோட்டத்தொழிலாளியின் உடல் நுவரெலியா, மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *