
நாட்டில், தொழுநோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொழுநோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் பிரசாத் ரணவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 மாதக்காலப்பகுதியினுள் கொழும்பு மாவட்டத்தில் 168 தொழு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 114 தொழுநோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 82 தொழு நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 தொழு நோயாளர்களும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஆறு மாதங்களில், 2017 ஆம் ஆண்டு தொழு நோய் பதிவான நோயாளர்களின் உறவினர்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன் மூலம் தொழு நோயாளர்களை உரிய வகையில் அடையாளங் காண முடியும் சுகாதார அமைச்சின் தொழுநோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்