யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் 63 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் பழங்கள் வியாபாரம் செய்து வந்துள்ளார்.பாட்டியின் மகன் வலிகாமம் மேற்குப் பகுதியில் விவசாயம் செய்ப்பவர்.யாழில் அண்மைக் காலமாக மழையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது.இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் குறித்த பாட்டியிடம் பழங்கள் வாங்குவதற்கு சென்றுள்ளனர்.பாட்டியிடம் பழங்களை வாங்கும் போது ,பாட்டியிடம் நலன் விசாரத்துள்ளனர்.பாட்டி இளைஞர்களுக்கு தனது சோகக் கதையை கூறியுள்ளார்.
எனது மகன் ,மனைவியின் நகைகளை அடகு வைத்து தோட்டம் செய்தார்.4 பரப்பில் வத்தகப் பழங்களை பயிரிட்டார்.வெயில் காலத்தில் பழங்கள் விற்பனை செய்யக் கூடியநிலையில் இருந்தது.இப்போது சசுமார் 200 க்கும் அதிகமான பழங்கள் ஒரே நேரத்தில் முற்றி விட்டன.அதனை விற்றால் தான் நகையும் மீட்கலாம்,தை மாதம் குழந்தையை பாடசாலைக்கும் சேர்க்கலாம் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
பாட்டியின் சோகக் கதையை கேட்ட இளைஞர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.வாருங்கள் பாட்டி உங்கள் வவீட்டுக்குச் செல்வோம் என்று அழைத்துச் சென்று,சுமார் 100 க்கும் அதிமான பழங்களை கொள்வனவு செய்துள்ளனர்.கிலோ ஒன்று 150 ரூபா வீதம் பழங்களை வாங்கியுள்ளனர்.
வாங்கிய பழங்களை லாண்ட் மாஸ்ரரின் ஏற்றிச் சென்றனர்.அப்போது பாட்டி கேட்டார்.ஏன் தம்பி இவ்வளவு பழம் வாங்கினீர்கள் என்று.அதற்கு இளைஞர்கள் ஒன்றுமே கூறாமல் பாட்டியிடம் இருந்து விடைபெற்று சென்றுள்ளனர்.பின்னர் அந்தப் பழங்களை புத்தூரில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இறந்தவரின் ஆண்டுத் திவசத்தில் “பழங்களை நன்றாக வெட்டி திவச வீட்டுக்கு வந்து செல்வோருக்கு வாசலில் நின்று பழங்களை கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.
நாட்டில் தற்போது இளைஞர்கள் பலர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில்,யாழ்ப்பாண இளைஞர்களின் இந்தச் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
பிற செய்திகள்