ராகலை, உயர்நிலை பாடசாலை மாணவர்கள் சாதனை!

ஜப்பான் கராத்தே தோ இதோசுகாய் சங்கத்தின் உள்ளூர் கராத்தே சுற்றுப்போற்றி 2022/10/29
அன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில்
700 க்கும் அதிகமான கர்த்தரே போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இதோசுக்காய் மத்திய மாகாணதிக்கான தலைவரும் பயிற்று விப்பாளருமாகிய சென்ஸே. நாகேந்திரன் தலைமையில் பல பாடசாலைகளை பிரதிநித்துவப்படுத்தி 19 மாணவர்கள் இச்சுற்று போட்டியில் கலந்து கொண்டார்கள்.

இதனடிப்படையில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும், மொத்தமாக 21 பதக்கங்களை அம்மாணவர்கள் பெற்று கொண்டார்கள். அதில் ராகலை உயர்நிலை பாடசாலையில் இருந்து இரு மாணவர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி உட்பட மூன்று பதக்கங்களை பெற்று கொண்டார்கள்.

ராகலை ரிபப்லிக்கன் சர்வதேச பாடசாலையில் இருந்து ஒரு மாணவரும் போட்டியில் கலந்து கொண்டு ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் உட்பட இரண்டு பதக்கங்களையும் பெற்று கொண்டார்கள். இது பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் மலையக மண்ணிற்கும் பெருமையென பாடசாலை சமூகத்தினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப் போட்டிகளின் பயிற்றுவிப்பாளராக கடைமையாற்றிய சென்ஸே, நாகேந்திரன் ராகலை உயர் நிலை பாடசாலையின் பழைய மாணவராவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *