போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கையும் களவுமாக சிக்கினார்!

ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி நேற்றிரவு அரபா நகரில் வைத்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதையுடையவர் இவர் ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன், இவரிடமிருந்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருளை விற்பனைக்கு கொண்டு சென்ற உந்துருளி மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த ஒரு தொகைப்பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர் நீண்ட காலமாக மிகவும் சூட்சுமான முறையில் போதைப்பொருளை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, கொழும்பிலிருந்து மொத்தமாக போதைப்பொருளைக்கொண்டு வந்து விற்பனை செய்து வந்ததுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவரை பல்வேறு தடவைகளில் கைது செய்ய முயற்சித்தும் சாதுர்யமாக தப்பித்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரின் பின்னணியில் மேலும் பல பெரும் புள்ளிகள் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

குறித்த நபர், மேலதிக விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *