இலங்கையில் அரிசிக்குள் 30 கோடி – தலை சுற்றிய அதிகாரிகள்

அம்பலாந்தோட்டை கொக்கல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அரிசி மூடைகளில் இருந்து 25 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி சுமார் 30 கோடி ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பலாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட பொலிஸ் குழுவொன்று சுற்றிவளைத்து குறித்த ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *