மின்சார வேலியில் பலியான தோட்டத்தொழிலாளிக்கு தீர்வு கிடைக்கும் வரை விடமாட்டேன் – இராதா கிஷ்ணன்!

நேற்று, மாலை டயகம கிழக்கு மூன்றாம் பிரிவில் மின்சார வேலி தாக்கி உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமகிருஸ்ணன் உயிரிழப்புக்கு உரிய நீதீயை வழங்குமாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு அனுதாபத்தை தெரிவிக்கின்ற அதேவேளை உயிரிழந்த தோட்டத்தொழிலாளியின் மரணம் தொடர்பில் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முழு மூச்சுடன் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் டயகம பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பணித்ததோடு அக்கரப்பத்தனை கம்பனியோடு கலந்துரையாடி உயிரிழந்தவருக்கு உரிய நியாயத்தை வழங்க வேண்டுமெனவும் பணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளர். அதற்கான விரைவாக தீர்வு கிடைக்கும் வரை ஓய மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *