திலினி பிரியமாலி வழக்கு தொடர்பாக மேலுமொருவர் கைது

<!–

திலினி பிரியமாலி வழக்கு தொடர்பாக மேலுமொருவர் கைது – Athavan News

திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டையிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

ஜானகி சிறிவர்தன கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்றும் திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *