யாழில் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்!

இலங்கையில் நலிவடைந்த மற்றும் பின்னடைவான பெண்களின் நுண் மற்றும் சிறு தொழில் முனைவோர்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஆசிய நிறுவன நிதி அனுசரணையுடன் நடைபெற்றது.

மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *