முகமாலை பொது நூலக உப அலுவலகம் திறந்து வைப்பு!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகமாலை பொது நூலக உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் குறித்த பொது நூலக உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளியின் பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் இசை நிகழ்வு மற்றும் வயலின் இசை மற்றும் ‘பச்சிலை’ சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பச்சிலைப் பள்ளியின் பிரதேச சபையின் 15.59 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த முகமாலை பொது நூலக உப அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *