வவுனியா நெளுக்குளம் பொலிஸார் விஷேட சோதனை நடவடிக்கை!

போதைப் பொருள் பாவனை மற்றும் விநியோகம் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், வவுனியா- நெளுக்குளம் பொலிஸார் விஷேட சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர்.

மோப்ப நாயின் துணையுடன் வவுனியா, நெளுக்குளம் சந்திப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, வீதியால் சென்ற பேரூந்துகள், சொகுசு வாகனங்கள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும், சந்தேகத்திற்கிடமான இடங்கள் மற்றும் நபர்களையும் பொலிஸார் சோதனையிட்டனர்.

அண்மைக்காலமாக வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரிமாற்றம் என்பன அதிகரித்துள்ளதுடன், வவுனியாவிலும் போதைப் பாவனை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *