கிளிநொச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் உள்ளிட்ட உற்பத்திகள் ஊடாக உணவு பாதுகாப்பை ஏற்படுத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், முன்னேற்றங்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது, மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *