யாழில் ரயிலுடன் மோதிய இளைஞர் – படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் புங்கங்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞன் அதே ரயிலில் ஏற்றி, யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.. இதையடுத்து நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *