முகமாலையில் பொது நூலக உப அலுவலகம் திறந்து வைப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசசபைக்குட்பட்ட இத்தாவில் பகுதியில் புதுதாக அமைக்கப்பட்டுள்ள முகமாலை பொது நூலக உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

பச்சிலைப்பள்ளியின் பிரதேச்சபையின் 15.59மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இன்று (04) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் குறித்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளியின் பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் இசை நிகழ்வு மற்றும் வயலின் இசை மற்றும் “பச்சிலை” சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *