வாடகை செலுத்தாத கடைகள் மீளப்பெறல் -சாவ. நகரசபை

வாடகை செலுத்தப்படாத கடை அறைகளை மீளப்பெற்று மீண்டும் கேள்வி கோரல் விடுத்து வழங்க சாவகச்சேரி நகரசபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபையின் விசேட அமர்வு நேற்றுமுன்தினம் சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது இந்த வருடத்தில் கடை அறைக்குரிய  வாடகை செலுத்த  வாடகையாளர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டது. ஆயினும் வாடகை செலுத்தாததால் சிவப்பு அறிவித்தல் ஒட்டியும் வாடகை செலுத்தப்படவில்லை.

இதனால் கடை அறைகளை மீளப்பெற்று மீண்டும் கேள்விகோரல் விடுத்து வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *