இறு­திப்­போ­ரின் போது புலிகள் எவரும் படையினரிடம் சரணடையவே இல்லை! -தக­வ­ல­றி­யும் ஆணைக்­கு­ழு­வில் இரா­ணு­வத்­தி­னர் சாட்சியம்

இறு­திப் போர் இடம்­பெற்ற காலப்­ப­கு­தி­யில் இலங்கை இரா­ணு­வத்­தி­டம் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் எவ­ரும் சர­ண­டை­ய­வில்லை என இலங்கை இரா­ணு­வம் தக­வ­ல­றி­யும் ஆணைக்­குழு முன்­பாக நேற்­றுச் சாட்­சி­யம் வழங்­கி­யது.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் கீழ் ஊட­க­வி­ய­லா­ளர் ஒரு­வர் முன்­வைத்த மேன்­மு­றை­யீடு, தவ­ல­றி­யும் ஆணைக்­கு­ழு­வில் நேற்­றுப் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. 2019ஆம் ஆண்டு குறித்த ஊட­வி­ய­லா­ளர் சர­ண­டைந்த விடு­த­லைப்­பு­லி­கள் தொடர்­பில் தக­வ­ல­றி­யும் உரி­மைச்­சட்­டம் மூலம் விண்­ணப்­பித்­த­போது, ‘எங்­க­ளி­டம் புலி­கள் சர­ண­டை­ய­வில்லை’ என அந்த விண்­ணப்­பத்தை இரா­ணு­வம் மறுத்­தி­ருந்­த­தது. இது தொடர்­பான மேன்­மு­றை­யீடே மூன்று வரு­டங்­க­ளுக்­குப் பின்­னர் நேற்­றுப் பரி­சீ­லிக்­கப்­பட்­டது. இதன்­போதே இலங்கை இரா­ணு­வம் இவ்­வாறு சாட்­சி­யம் வழங்­கி­யது.

‘போர் இடம்­பெற்ற பகு­தி­யி­லி­ருந்து மக்­கள் இடம்­பெ­யர்ந்­தார்­கள். அவர்­கள் புலி­களா? பொது­மக்­களா? என்­பது எமக்கு தெரி­யாது. நாம் பொறுப்­பேற்­றுக் கொண்­ட­போது பதி­வு­கள் எத­னை­யும் மேற்­கொள்­ள­வில்லை. எம்­மி­டம் வந்­த­வர்­களை பேருந்­து­க­ளில் ஏற்றி மறு­வாழ்வு நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பி­வைத்­தோம். அதன்­பின்­னர் மறு­வாழ்­வுப் பணி­ய­கமே அவர்­கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது’ என்று இரா­ணு­வம் சாட்­சி­யம் வழங்­கி­யது.

ஆனால், ஊட­க­வி­ய­லா­ளர் சார்­பாக ஆணைக்­கு­ழு­வில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி ஸ்வஸ்­திக்கா, இரா­ணு­வத்­தி­ன­ரின் குற்­றச்­சாட்­டுக்­களை மறுத்­த­தோடு இரா­ணு­வத்­தி­டம் புலி­கள் சர­ண­டைந்­த­மைக்­கான ஆதா­ரங்­களை ஆணைக்­கு­ழு­வுக்கு சமர்ப்­பித்­தார். மேலும், மறு­வாழ்­வுப் பணி­ய­கத்­தி­டம் இரா­ணு­வத்­தி­னர் கூறும் தக­வல்­கள் இல்லை என்று, மறு­வாழ்­வுப் பணி­ய­கம் வழங்­கி­யுள்ள தக­வல்­க­ளை­யும் சட்­டத்­த­ரணி ஸ்வஸ்­திக்கா ஆதா­ர­பூர்­வ­மா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

இரு­த­ரப்பு வாதங்­க­ளை­யும் கேட்ட ஆணைக்­குழு, ‘அர­சாங்­கமே இந்த விட­யங்­களை சர்­வ­தேச அமைப்­பு­க­ளுக்கு பல முறை வழங்கி இருக்­கி­றது. எனவே, 2009ஆம் ஆண்டு இடம்­பெற்ற சம்­ப­வங்­கள் தொடர்­பில் இப்­போது மறைப்­ப­தற்கு ஒன்­று­மில்லை’ என இரா­ணு­வத்­துக்கு அறி­வு­றுத்­தி­யது.

புலி­கள் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் சர­ண­டைந்­த­மைக்­கான எழுத்­து­மூல சமர்ப்­ப­ணங்­களை 10 நாள்­க­ளுக்­குள் இரா­ணு­வத்­துக்கு ஊட­க­வி­ய­லா­ளர் வழங்க வேண்­டும். அது­போல இரா­ணு­வ­மும் எழுத்­து­மூல சமர்ப்­ப­ணங்­களை விண்­ணப்­ப­தா­ர­ருக்கு வழங்­க­வும் ஆணைக்­குழு உத்­த­ர­விட்­டது. ஜன­வரி 4ஆம் திகதி மனு மீள ஆணைக்­குழு முன்­பாக விசா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *