
நாட்டு மக்களின் போராட்டங்களையும், மக்கள் அலையையும் ஒருபோதும் நசுக்க முடியாது என மக்கள் போராட்ட ஏற்பாட்டாளர் டானிஷ் அலி தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகே, ஸ்ரீறி தம்ப தேரர் உள்ளிடவர்களை விடுதலை செய்வதக்கான அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக கொழும்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அரகல போராட்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவரான டானிஷ் அலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களுடைய போராட்டங்களை ஒரு பொழுதும் யாராலும் நசுக்கவோ அல்லது தடுக்கவே முடியாது அதை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அது கடந்த காலங்களை நினைத்து பார்த்தால் தானாகவே அரசியல் வாதிகளுக்கு நினைவுக்கு வரும்.எத்தனை பொலீஸ், படையனிகளை குவித்தாலும் அதை உடைக்கும் வல்லமை உண்டு.அதை அரகல போராட்டம் நினைவு படுத்தும்.
போராட்டம் என்பது மக்களின் உரிமை பொலீசாரை குவிப்பது அரசின் அராஜகம் நேற்று முன் தினம் நடை பெற்ற போராட்டம் எமக்கு வெற்றிதான் அது முடிவு அல்ல ஆரம்பம். பொலிஸாருக்கும்,சிறைக்கும் நாம் அஞ்சப் போவதில்லை.
ரணில் ராஜ பக்சர்கள் தான் அஞ்ச வேண்டும். எமது சகோதரர்கள் வெளியில் வரும் வரை போராடுவோம் என்றார்.
பிற செய்திகள்