யாழில் டெங்கு நோயால் இதுவரையில் 2,774பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயால், இன்றுவரையான காலப்பகுதியில் இரண்டாயிரத்து 774பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) டெங்கு நோய் பரவல் தொடர்பாக தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வருடத்தில் 8 டெங்கு நோய் இறப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இரண்டாயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 301பேராக குறைந்திருந்தது. தற்போது மீண்டும் அதிகரிப்பை கண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *