பொதுசன வாக்கெடுப்புத் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் சர்வதேசத்திடம் வலியுறுத்தவேண்டும் – சிவாஜிலிங்கம் வேண்டுகோள்!

தற்போது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ள சூழ்நிலையில் வழமை போல் பாதுகாப்பு செலவுக்கு கோடான கோடி ரூபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியிலே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழமைபோல் அவர் ஒரு நரி. ஆனால் அவர் கரடி ஒன்றை அவிட்டிருக்கிறார் என்று தான் சொல்ல முடியும். ஓராண்டுக்குள்ளே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம்.ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு முண்டு கொடுத்திருந்த அந்த அரசால் 4 ஆண்டுகளாக கொண்டுவர முடியாத புதிய அரசியல் திட்டத்தை ஓராண்டுக்குள்ளே கொண்டு வந்து என்ன மந்திரத்தில் மாங்காய் வீழ்த்த போகிறீர்களா? என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த ஏமாற்றுக்குள்ளே தொடர்ந்து நாங்கள் ஏமாற்றப்படுவோமா?என்ற கேள்வி எழுகிறது.தமிழ் மக்களை பொறுத்தளவிலே இனி மேல் தொடர்ந்தும் இலங்கைக்கு ஒரு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்ப்பதிலே அர்த்தமில்லை .சர்வதேச நோக்கிலே எங்களுடைய பார்வையிலே தெளிவான நிலைப்பாடு இருக்க வேண்டும்.

எங்களுடைய 3 தமிழ் தேசிய அணிகளும் சர்வதேச சமூகத்தை நோக்கி ஒரு பொதுசன வாக்கெடுப்பினை தொடர்ந்து வலியுறுத்துவதன் ஊடாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த பிரச்சனைகளுக்கு ஆதரவு கொடுக்க கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே இந்தியாவின் யோசனையாக ,13 திருத்தம் அமைந்துள்ளது.இந்த திருத்தம் எங்களுக்கான தீர்வு என்று வற்புறுத்தக் கூடாது என இந்தியாவிடம் கூறிக்கொள்கிறோம்.

வடக்கு,கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும் என்று அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றுங்கள். வீட்டிலே ஒவ்வொருவரினதும் பேச்சு உரிமை 6 ஆவது திருத்தத்தின் ஊடாக மறுக்கப்படுகின்றது.

13 ஆவது திருத்தம் என்று இருக்கிறீர்கள்.ஏன் 6 ஆவது திருத்தத்தினை மறந்து விட்டீர்கள் என்ற கேள்வி இருக்கின்றது.

மாவீரர் வாரம் நவம்பர் 21 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதி வரை அனுஷ்ட்டிக்கப்பட உள்ளது.நாங்கள் என்ன பிரகடனத்தை சொல்ல போகிறோம் என்ற விடயம் இருக்க போகிறது. மக்கள் ஒரு உறுதியான எடுக்க வேண்டும்.புலிகளின் தாகம் ,தமிழீழ தாயகம் என்றே தங்களின் உயிர்களை தியாகம் செய்தார்கள் .

எனவே சுயநிர்ணய அடிப்படையில் பொதுசன வாக்கெடுப்பினை வலியுறுத்துகிறோம் என்ற கோரிக்கையினை முன்வைக்க வேண்டும்.

செத்த பாம்பினை திருப்ப அடித்துக்கொண்டிருப்பது போல் சமஷ்டி என்று சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.இந்த மாவீரர் வாரத்தினை தமிழீழம் எங்கும் மிக எழுச்சியாக அனைவரும் அனுஷ்டிக்க முன் வர வேண்டும்.

என்ற கோரிக்கையினை முன் வைக்கிறோம்.புலம்பெயர் தேசங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.கார்த்திகை 27 ஆம் மாவீரர் தினத்தினை மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்க முன் வர வேண்டும் என தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *