திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களுக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று , திருகோணமலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளரும் கலந்து கொண்டார்.
இதன் போது செயலாளருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் கையளிக்கப்பட்டதுடன், மூதூர் தளவைத்தியசாலைக்கு செயலாளரை உத்தியோகபூர்வ விஜயம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் மூதூர் தளவைத்தியசாலையின் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் செயலாளர் மட்டத்தில் செய்ய வேண்டிய ஒத்துழைப்பு தொடர்பில் சாதகமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மூதூர் தளவைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் எழுத்து மூலமான வேண்டுகோளுக்கு இணங்க 02.11.2022 திகதி அன்று மூதூர் வைத்தியசாலைசாலைக்கு புதிதாக ECG உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டு கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்காக வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் சில கோரிக்கைகள் தொடர்பில் உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கவனம் எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.



பிற செய்திகள்