இலங்கையில் இருந்து 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

மன்னார் ஊடாக படகு வழியாக தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர். இவ்வாறு சென்ற 10 பேர் தொடர்பில் மறாயன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தமிழகத்திற்குச் சென்ற 10 பேரும் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் ஐந்து பெண்கள், 4 ஆண்கள் ஒரு சிறுவர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *