புஸல்லாவை எல்பொட தோட்டப் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

புஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை எரிபொருள் கொல்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கம்பளை – புஸ்ஸலாவ எல்பொட தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு தேவையான லீற்றர் டீசலை வழங்கிவிட்டு, கம்பளை நோக்கி திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தானது சீரற்ற காலநிலையால் வீதியல் ஏற்பட்ட வழுக்கல் தன்மையால் சாரதியின் கட்டுப்பாட்டைமீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ – புரட்டொப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *