
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்களின் போதைப்பொருள் பாவனையை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை என்றால் மாணவர்களின் எதிர்காலம் நாசமாகி விடும் என்று நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று எப்போதும் இல்லாதவாறு போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து செல்கிறது. நாடு முழுவதிலும் பாடசாலை மாணவர்கள் இந்த கொடிய போதை பொருள் பாவனை தொடர்பான செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
இதனை உடனடியாக சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாட்டில் இருந்து முற்றாக ஒழிக்க வேண்டும்.
நுவரேலியா மாவட்டத்திலும் பாடசாலை மாணவர்களின் போதை பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் அதனை வழிநடத்துவது யார் எங்கிருந்து வருகிறது விற்பனையாளர் யார் என்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு வருவத்தோடு சம்மந்தப்பட்டவர்களை உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக நுவரேலிய மாவட்டதுக்கு பொறுப்பான பொலிஸ் தலைமை அதிகாரியிடம் ஆலோசனை செய்து வருகின்றோம் விரைவில் நல்லதொரு முடிவை எடுப்போம் என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்