மலையக மக்களை சமூகமயமாக்குவதக்கு ஒரு குழுவை நியமிக்கப் போவதாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருப்பது அவரின் கேலி கூத்துகளில் ஒன்று இது மக்களை கோமாளிகலாக்கும் நாடகம் என மலையக மரபுகளை பாதுகாக்கும் குழுவின் தலைவரும் அருட்தந்தையுமான மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய பிர்தியோக செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
மலையக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் இலங்கை அரச தலைவர்களும் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மாலை மரியாதையை செலுத்தி தமது இருப்பை தக்க வைத்து கொள்ளும் மலையக அரசியல் கைக்கூலிகள் ஒரு போதும் சரி வரமாட்டார்கள்.
சுமார் 200 வருடங்கள் கடந்தும் இன்னும் இந்த மக்கள் சமூக மயமாக்கவில்லை, சமூகமயமாக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார ரிதியாகாக உழைத்து கொடுக்க வேண்டும்,அரசியல் ரிதியாக தேர்தல் காலங்களில் உழைத்து கொடுக்க வேண்டும், அபிவிருத்தி பயணத்திக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் ஆனால் ஒரே மக்களாக இலங்கை சமூகம் என அங்கீகரிக்க மட்டும் குழு அமைக்க வேண்டும்,ஆலோசிக்க வேண்டும் ஏன் இந்த விடயத்தில் மட்டும் இத்தனை பாகுபாடுகள் எத்தனையோ தடவைகள் ரணில் பிரதமராயிருக்கின்றார், அமைச்சராக இருந்திருக்கின்றார். மலையக மக்களுக்கு என்ன செய்திருக்கிறார் அல்லது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குத்தான் என்ன செய்திருக்கிறார்.
200 வருடங்கள் செய்யாத ஒன்றை 2வருடங்களில் இந்த ரணில் செய்ய போகின்றாரா? இது மக்களை பம்மாத்து காட்டும் வேலை இவரால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. இவரால் மட்டும் அல்ல எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.
இந்திய அதிகாரிகள் இந்திய தலைவர்கள் வரும் போது மட்டும் வாக்குறுதிகளை கொடுப்பது, அல்லது இந்தியாவின் உதவிகள் கிடைக்கும் போது இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுவது, பொய்யான வாக்குறுதி வழங்குவது, அறிக்கை விடுவது இது எல்லாம் இவர்களின் வழமையான கூத்து நாடகங்களில் ஒன்று.
இவ்வாறான நாடகங்களை நாம் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இருந்தே பார்த்து அவதானித்து வருகின்றோம். மாறிமாறி ஆட்சி பீடம் ஏறும் ஒவ்வொரு அரச தலைவர்களும் இந்த மக்களை கிள்ளு கீரையாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நாட்டிலே மலையக மக்களின் நிலவுரிமை, வீட்டுரிமை, மொழிஉரிமை. இன விகிதாசார உரிமை படிப்படியாக கண்களுக்கு தெரியாமல் பறிக்கப்பட்டது.
இவை அனைத்துக்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும் என்றால் எதிர்வரும் 75 வது சுதந்திர தின உரையிலே மலையக மக்களை தேசிய இனமாக அங்கீகரிப்பதோடு அவர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ அறிக்கையினை அறிவிக்க வேண்டும்.
அத்தோடு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் சுய உரிமை அரசியல் தீர்வுக்கு விரைவாக வழி வகுக்கவேண்டும் இல்லை என்றால் விளைவுகள் இனி பாராதூரமானதாக அமையலாம் என தெரிவித்தார்.
பிற செய்திகள்