
வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து யாழ் நகர் ஊடாக கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு இரவு 12.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பேரூந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்தனர். அதில் நால்வர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேரூந்து சாரதியான சிவபாலன் சிவரூபன் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் உயிரிழந்த பேரூந்தின் சாரதியான உடுப்பிட்டியை சேர்ந்த சிவரூபன் கிராமத்தின் பல்வேறு சமூக, சமய செயற்பாடுகளிலும் துடிப்புடன் முன்னின்று செயற்படுபவராவார். சமூக செயற்பாடுகளூடாக கிராம மக்களின் பேரன்புக்கு உரியவராக அவர் திகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அத்துடன் கடின உழைப்பாளியுமாவார். இவரின் திடீர் மறைவு உடுப்பிட்டி வாழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்